×

‘தென்மாவட்ட மக்கள் படிக்காதவர்களா? செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்கணும்’

மதுரை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநில பொதுச்செயலாளர் எஸ்.தினகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற கேள்வி நேரத்தின்போது, பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தென் மாவட்ட மக்கள் படிக்காதவர்கள் என்று பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். உடனடியாக செல்லூர் ராஜூ தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ‘தென்மாவட்ட மக்கள் படிக்காதவர்களா? செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்கணும்’ appeared first on Dinakaran.

Tags : Southern District ,Sellur Raju ,Madurai ,State General Secretary ,All India Forward Block Dinakaran Division ,S. Dinakaran ,minister ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...